CHAPTER 1

Tamil Medicine

the most informative pages on Siddha, Ayurvedha, Tamil Medicine
தந்தரோக சிகிச்சை

தந்தரோகத்தில் இரத்தத்தை முதலில் வடியும்படி செய்து திரிபலை கியாழத்தில் வாய்கொப்பளிக்கும் படி செய்யவேண்டியது.

ஆல், அத்தி, அரசு, வேல், இத்தி இவைகளை சமஎடையாக
சூரணித்து இத்துடன் தேன் நெய் கலந்து கண்டூஷ் செய்தால்,  தந்த ரோகம் நிவர்த்தியாகும்.

ஜீரகாதிசூரணம் :- சீரகம், உப்பு, கடுக்காய், இலவன்முற்
கள் இவைகளை சமஎடையாக சூரணித்து இந்த சூரணத்தில் பிரதிதினம் பற்களை தேய்த்து வந்தால் தந்தவிரணம், ஈறுகட்டி, பல்குத்தல், இரத்தம் வடிதல், வீக்கம், அசைவு, நிவர்த்தியாகும்.

கருணாதி சூரணம் :- திப்பிலி, இந்துப்பு, சீரகம் இவைகளை சமஎடையாக சூரணித்து பஸ்கிலவங்கத்தால் பலாட்டம், குத்தல்,வீக்கம் இரத்தம் வடிதல், இவைகள் நிவர்த்தியாகும்.

த்திரமுஸ்தாதி வடுகங்கள் :- கோரைக்கிழங்கு, கடுக்காய் சுக்கு, திப்பிலி, மிளகு, வாய்விளங்கம், வேப்பன் இலை இவைகளை சமஎடையாக கோமூத்திரத்தில் அரைத்து சுண்டையளவு மாத்திரைகள் செய்து நிழலிலுலர்த்தி இம்மாத்திரை யிலொன்றை
வாயில் போட்டு அடக்கிவர பற்கள் கெட்டியாகும், பல்லாட்டம் நீங்கும்.