உளமாந்தை
க்ஷயரோகத்தின் பிரிவாகிய இந்த ரோகம் அக்கினிமாந்தம்
உள்ளபோது போஜனம் செய்தல், இரவில் விழித்தல், பகலில் உறங்கல்
புலாலையே மிகவும் புசித்தல், இது வாத உளமாந்தை, பித்தஉளமாந்தை
சிலேஷ்மஉளமாந்தை, தொந்தஉளமாந்தை என நான்கு வகைப்படும்.
1. வாத உளமாந்தை :- இது நெஞ்சு அழுவெலும்பு பக்கம்,
இவை விம்மல், நினைவழிதல், தொனியோடு நொந்து இருமல் அற்ப
சுரம், உள்ளில் கட்டிகள் உண்டாகி பழுத்து உடைந்து சீழ் முதலியது
வாயால் விழுதல், கைகால் எரிவு என்னும் குணங்களை உண்டாக்கும்.
2. பித்தஉளமாந்தை :- இது மிகத்திரண்டு கீழ் வயிற்றில்
கட்டிகளுடன் மிகப்பொருமி, புண்போல் நொந்து, சர்வாங்கமும்
உளைச்சலோடு தலைவலி, இருமல் இளைப்பு, மிடறு விரணமாதல்
மயக்கம், புரட்டல், வாயால் சீழ் விழுதல் என்னும் இக்குணங்கள
யுண்டாக்கும்.
3. சிலேஷ்ம உளமாந்தை :- இது உடல் உருகி தேகமெல்லாம்
புண்போல் நோதல், வாயால் சீழ் விழுதல், மனக்கலக்கம், வாந்தி,
மயக்கம், சிலேஷ்மாதிக்கம், நடுக்கல், பஞ்சுபோல் தேகம் வெளிறல்
என்னும் குணங்களை உண்டாக்கும்.
4. தொந்த உளமாந்தை :- இது தலைவலி, சுரம், இருமல்,
கோழை, அசதி, மிகு உறக்கம், துர்வாசனையுடன் வாயால் சீழ்விழுதல், சர்வாங்கமும் தினவு, பசிமந்தம் என்னும் குணங்களை உண்டாக்கும்.
உளமாந்தைரோக சாத்தியா சாத்தியம் :- பித்த உளமாந்தை
பலவித சிகிச்சைகளினால் சாத்தியம். வாத, சிலேஷ்ம உளமாந்தைகள் சிகிச்சைகளுக்கு வசப்படாவிட்டால் அசாத்தியம். தொந்த
உளமாந்தை அசாத்தியம்.
